குறுஞ்செய்திகள்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

அந்த அறிவிப்பில் பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் ஹப்புத்தளை பகுதிகளுக்கும் கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர மற்றும் உடுநுவர பிரதேசங்களுக்கும் மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தில் மாவனெல்ல, தெஹியோவிட்ட, கலிகமுவ, வரகாபொல மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தின் மாவத்கம பிரதேசத்திற்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் இம்புல்பே, இரத்தினபுரி மற்றும் பலாங்கொட பிரதேசங்களுக்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

பத்தாவது அவரிக்கு ஆக்கங்கள் கோரப்படுகின்றன பத்தாவது அவரிக்கு ஆக்கங்கள் கோரப்படுகின்றன 

ஆற்றல் உள்ள பெண்களின் அமைப்பான ஸ்ரீலங்கா பென் கிளப்பின் பத்தாவது வெளியீடான அவரி சஞ்சிகைக்கு பெண் எழுத்தாளர்களிடமிருந்து ஆக்கங்கள் கோரப்படுகின்றன.

இதற்காக அறிவியல்,உளவியல்,இலக்கியம்,மருத்துவம்,விவசாயம்,உலக நடப்பு,தற்கால பிரச்சனைகள் ,இஸ்லாம் சம்பந்தமான கட்டுரை களும்,நான்கு பக்கங்களுக்கு மேற்படாத சிறுகதைகளும்,சமூக பிரச்சனைகளை மையமாக கொண்ட கவிதைகளும்,நூல் அறிமுகங்களும்சித்திரங்களும், என்பன கோரப்படுகின்றன.

மேற்படி ஆக்கங்களை 20/05/2024 திகதிக்கு முன்னர் மசூரா மஹால் ,மருதமுனை 04.என்ற முகவரிக்கு அல்லது 0770696559 என்ற வட்சப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.

( பாரா தாஹிர் )

 

VIDEOS

இந்தியா

இலங்கை

விளையாட்டு

தமிழ்நாடு

உலகம்

Recommended